Monday, February 25, 2013

‘ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா’ இன்று

சர்வதேச எழுத்தாளர் கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் எழுதியுள்ள ‘ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா’ நூல் வெளியீட்டு விழா இன்று (25) கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்த்தன கலாசார மண்டபத்தில் பி.ப. 4.00 மணிக்கு நடைபெறும்.

மனோ வைத்திய நிபுணர் டாக்டர் நிரோஷ மெண்டிஸ்பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில் கொழும்புப் பல்கலைக்கழக கல்விப்பீட பேராசிரியர் மா. கருணாநிதி தலைமை தாங்குகின்றார். விமர்சகரும் மேடைப் பேச்சாளருமான அல்ஹாஜ் என்.ஏ. ரஷீத் பிரதம பேச்சாளராகக் கலந்து கொள்கிறார்.

இந்நூல் வெளியீட்டு விழாவின்போது, திரு. கே.எஸ். சிவகுமாரன் (இருமொழி வித்தகர்), அரூஸ் ஹாஜியார் (சேவைச் செம்மல்), திருமதி யமுனா பெரேரா (சீர்மியச் செம்மல்), அல்ஹாஜ் அனீப் மௌலானா (சேவைச் செம்மல்), அல்ஹாஜ் என்.எம். அமீன் (இதழியல் வித்தகர்), எம்.எஸ். முகம்மத் அஸ்மியாஸ் ( சீர்மியச் செம்மல் ) ஆகியோர் விருது வழங்கி கௌவிக்கப்படவுள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com