Sunday, February 17, 2013

27 வயது படைச்சிப்பாய் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை

மட்டக்களப்பு கல்லடி படைமுகாமில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர்; தன்னைத்தானே துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதில் வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த விஜயலால் (27வயது) என்ற படைச் சிப்பாயே இவ்வாறு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் இராணுவத்தில் கடமையேற்று சுமார் மூன்று வருடங்களே கடந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com