Thursday, February 14, 2013

மாத்தறையில் கடத்தப்பட்ட 15 வயது மாணவி மீட்பு

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15 வயது மாணவியைக் கடத்திய இராணுவ வீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த 15 வயது மாணவி அநுராதபுரத்திலுள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தச் சிறுமி மாத்தறையிலுள்ள தனியார்வகுப்பொன்றுக்குச் சென்றபோதே சந்தேக நபரான இந்த இராணுவ வீரர் மாணவியைக் கடத்திச்சென்று அநுராதபுரத்திலுள்ள வீடொன்றில் தடுத்துவைத்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்தும், பலமுறை போய்வந்தும் எவ்விதத் தகவல்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் மாத்தறை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுப் பொலிஸார் கடந்த 10 ஆம் திகதி, சந்தேக நபரையும், சிறுமியையும் கைது செய்துள்ளனர்.

தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. விசாரணைகள் முடிவடைந்ததும் இவ்விருவரும் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும், சிறுமியை வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com