Monday, January 21, 2013

ரிஸானா குடும்பத்தினருக்கு ஜனாதிபதி அழைப்பு

ரிஸானா நபீக்கின் குடும்பத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை சந்திக்கவுள்ளார். இது தொடர்பான அழைப்பு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து ரிஸானாவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பு தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதை ரிஸானாவின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாளை மாலை இடம்பெறவுள்ள இச் சந்திப்பில் ரிஸானா நபீக்கின் குடும்ப உறுப்பினர்கள் சகலரும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com