Sunday, January 20, 2013

விசுவமடுப் பகுதியில் எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி விசுவமடுப்பகுதியில் இளம் பெண்ணொருவரின் சடலம் ஒன்றை எரிந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சடலமானது விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? என்பது தொடர்பான தகவல்கள் எவையும் இன்னுமும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பில்; விசுவமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com