Saturday, January 26, 2013

சிங்கள - முஸ்லிம் பிரச்சினையை முறியடிக்க பாதுகாப்புப் படை தயார் நிலையில்

மதவாத, இனவாதப் பிளவுகளை ஏற்படுத்தி கைகலப்பிற்குள் உள்ளாக்குவதற்கு சில சக்திகள் முயன்று வருவதனால் தயார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வெவ்வேறான பிரச்சினைகளை ஏற்படுத்தி மீண்டும் இந்த நாட்டை படுபாதாளத்திற்குள் தள்ளுவதற்கு இயக்க ரீதியாக சில சக்திகள் செயற்படக்கூடும் என பாராளமன்றில் சிங்கள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் எந்நேரம் என்றாலும் பிரச்சினைகள் கிளம்பும்போது அவற்றைத் தடுப்பதற்காக பாதுகாப்புப் பிரிவினர் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com