Monday, January 14, 2013

நீதியரசர் பதவிக்கு எட்டுப்பேர் இழுபறி!

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா பதவி நீக்கப்பட்டதனால், பிரதம நீதியரசர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் எட்டுப்பேர் முன்மொழியப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

சிராணி திலக்கவர்தன, நிமல் காமினி அமரதுங்க, ஸலீம் மர்ஸூப், கே. ஸ்ரீபவன், எஸ். ஐ. இமாம், சத்யா ஹெட்டிகே, சந்ரா ஏக்கநாயக்க, மற்றும் முன்னாள் நீதியரசர்களான மொஹான் பீரிஸ், ஸீ. ஆர். த சில்வா ஆகியோர் இந்த வெற்றிடத்திற்காக முன்மொழியப்பட்டுள்ளனர்.

எதுஎவ்வாறாயினும், இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக அழைப்புவிடுக்கப்பட்ட சீ. ஆர். த. சில்வா தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சொந்தக் காரணங்களுக்காக நிராகரித்துள்ளார் எனவும் தெரியவருகிறது.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com