Thursday, January 17, 2013

இலங்கையில் 8 மில்லியன் சட்டவிரோ தொலைபேசிகள் !

இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள 15 மில்லியன் கையடக்க தொலைபேசிகளில் 8 மில்லியன் தொலைபேசிகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டவை என தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் கையடக்க தொலைபேசிகளை தடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் கையடக்க தொலைபேசிகள் அனைத்தும் தொலைத்தொடர்புகள் ஓழங்கமைப்பு ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள், தொலைத்தொடர்புகள் ஓழங்கமைப்பு ஆணைக்குழுவில் பதிவுசெய்வதற்கு வருடாந்த அனுமதிக் கட்டணமாக 10 ஆயிரம் ரூபாவை செலுத்தவேண்டும் எனவும், இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கையடக்க தொலைபேசிக்கும், 15 வீத வரியும் அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இனி இவ்வாறான சட்டவிரோத தொலைபேசிகள் பயன்படுத்தப்படும் போது அதன் இரகசிய எண்கள் பதிவுசெய்யத்தக்க வகையில் புதிய தொழில் நுட்பமொன்றை அறிமுகப்படுத்த தமது ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com