Tuesday, January 15, 2013

24மணித்தியாலத்திற்குள் பாகிஸ்தான் பிரதமரை கைது செய்யுமாறு உத்தரவு!

பாகிஸ்தான் பிரதமர் ராசா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்யுமாறு அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவை பாகிஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி பிறப்பித்துள்ளார். ரென்டல் பவர் வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்த அஸ்கார் கான் என்பவரை பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டத்தில் நடந்துள்ள ஊழலில் ராஜா பர்வேஸ் அஷ்ரப்புக்கு தொடர்பு இருப்பதாக வந்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


இதேவேளை மேலும் 15 பேரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com