Tuesday, January 8, 2013

1050 புதிய புத்தகங்களுடன் புத்தகக்கடை ஊழியர் கைது!

(கலைமகன் பைரூஸ்) பாடசாலை மாணவர்களுக்குப் பழைய கிழிந்த பாடப்புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, புதிய புத்தகங்களை கம்பளைப் புத்தகக் கடையொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதை இன்று (08) கம்பளைப் பொலீசார் கண்டுபிடித்துள்ளனர். 1050 புதிய புத்தகங்களுடன் புத்தகக் கடை ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் புத்தகங்களை விற்பனை செய்த பாடசாலையையும் கண்டுபிடிப்பதற்கு பொலீசார் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். கிழிந்து நிறமாற்றத்துடன் கூடிய புத்தகங்கள் கூடுதலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாகவே வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com