Saturday, December 22, 2012

இரண்டு விபத்துச் சம்பவங்களில் மூவர் பலி

இரண்டு விபத்துச் சம்பவங்களில் இடம்பெற்ற விபத்துக்களின் மூவர் பலியாகியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மல்வானை பிரதேசத்திலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலைக்கு இன்று காலை வேலைக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்..

இதில் மல்வானை மாப்படிகம பிரதேசத்தைச் சேர்ந்த அலங்கார கபுகே குஸூமாவதி (41) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பண்டாரகம வீதாகம பகுதியில் பயணித்த வான் ஒன்று மோட்டார்சைக்கிளொன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 20 மற்றும் 19 வயதுடைய சகோதரர்களே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மஹரகம- பிலியந்தல லும்பினி ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்தும் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com