Friday, December 21, 2012

தந்தை செல்வா சதுக்கத்தை செலவின்றி் துப்பரவு செய்யத தமிழரசுக்கட்சி

தந்தை செல்வா சதுக்கத்தை செலவின்றி துப்பரவு செய்ய தமிழரசுக்கட்சி கண்டு கொண்ட புதிய வியூகமே இன்றைய போராட்டம் இவர்கள் மாணவர்களுக்காக போராடவில்லை தமது அரசியலுக்காகவே இந்த உணவுத்தவிர்ப்பு ஆர்ப்பாட்டம் என பொதுமக்கள் தெரிவித்துக்கொண்டிருக்கும் போது உண்ணாவிரதப்போராட்டத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தருந்தது இனம் தெரியாத கும்பல் ஒன்று.


உண்ணாவிரதப் போராட்டம் என தகரப்பந்தலில் இருந்து விட்டு போகநினைத்து வந்த 36 பேர் அடங்கிய கும்பலுக்கு தலையில்லாமல் கால் மட்டுமிருந்து அதிர்ச்சி கொடுகத்து போராட்டக்களம்.


உண்ணாவிரத போராட்டம் என்ற போர்வையில் வந்தவர்களுக்கு தமிழர்களது வலி என்ன என உணர்த்தியது போராட்டக்களம் காரணம் இவர்கள் இளைப்பாற தற்காலிகமாக போடப்பட்டிருந்த தகரப்பந்தலின் தகரங்களை இரவோடு இரவாக கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்து தமிழர்களது வலியை புரிய வைத்தது இனம் தெரியாத கும்பல் ஒன்று.

9பது கோரிக்கையை முன்வைத்து தழிழரை ஏமாற்ற தமிழர், தமிழ் மக்கள் என வாய்பேச்சில் சொல்லில் சொல்லிக்கொண்டு வந்துவிட்டீர்கள் இன்று ஒருநாள் ஆவது வெயில்க்காய்ந்து பாருங்கள் தமிழர்களது வலிஎன்னவென.

உண்ணாவிரதத்திற்கு வந்தவர்கள மாணவரைப்பற்றி சிந்திக்காமல் உண்ணாவிரதம் தொடர்பில் தாம் கொடுத்த செய்தி அப்படியே பிரசுரிக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொணடிருந்தனர் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிறிதரன்,மற்றும் தமிழ்ரசுக்கட்சியின் நகரசபை தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள.

36 பேர் மட்டுமெ கலந்து கொண்டிருந்தஇந்த ஆர்ப்பாட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் தாய், தந்தை, உறவுகள் என யாரும் கலந்து கொள்ளவில்லை.

1 comments :

Anonymous ,  December 22, 2012 at 6:45 PM  

From the start to upto now,the real motivation for every action was hidden,but for tamil public it was something outlandish ideas for a created struggle by them.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com