Monday, December 10, 2012

நாட்டில் பல பாகங்களிலும் மர்மப் பொருட்களைக் கண்டதாக பொது மக்கள் தெரிவிப்பு?

அதிக வெளிச்சத்துடன் இவ்வாறான பொருட்களை காலை மற்றும் மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளிலும் வானில் மர்ப் பொருட்களைப் பார்வையிட்டதாக மக்கள் பொது மக்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிலாபம், பண்டாரவள, பதுளை, அனுராதபுரம், நொச்சியாகம உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறான மர்மப் பொருட்கள் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.

நொச்சியாகம பிரதேசத்தில் மிகப் பிரகாசமான பொருளொன்று வானிலிருந்து மரமொன்றில் இறங்கியதனைப் பார்த்ததாக பாடசாலை மாணவியொருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மன்னார் வானில் மர்ம பொருள் ஒன்று தென்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை மன்னாரில் அதிக வெளிச்சத்துடன் கூடிய பொருளொன்று மெதுவாக தரைக்கு வந்திறங்கியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

விமானமொன்று தீப்பற்றி எரிவதனைப் போன்று இந்த வெளிச்சம் காட்சியளித்ததாகத் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் தென்படும் மர்மமப் பொருட்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com