Wednesday, November 28, 2012

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாள் பகீஸ்கரிப்பில் குதிக்கவுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாள் வகுப்பு பகீஸ்கரிப்பை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் இப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைகக் கண்டித்தும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியுமே இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.

இதேவேளை மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com