Friday, November 30, 2012

மட்டக்களப்பில் சக்தி வாய்ந்த கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் கைக்குண்டொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கரடியனாறு பழைய பொலிஸ் நிலையத்தின் கழிவு நீர் கானுக்குள் இருந்தே இக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் பழைமையான கைக்குண்டொன்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கழிவு நீரில் கைக்குண்டொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்மையை தொடர்ந்தே இது மீட்க்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குண்டை குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com