Wednesday, November 28, 2012

த.தே.கூ. எம்.பி சரவணபவன் வாகனம் இனந் தெரியாத குழுவால் அடித்து உடைப்பு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனம் இன்றைய தினம் இனந்தெரியாதவர்களால் அடித்து நெருக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
யாழ்.பல்கலைக்கழத்தில் இன்றைய தினம் சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் ஒன்று மாணவர்களால் நடாத்தப்பட்டது. இதன்போது பொலிஸார் மாணவர்கள் மீது தடியடி நடாத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சரவணபவன் எம்.பி வந்தார். இதனைத் அவதானித்த சிவில் உடையில் இருந்த சில இளைஞர்கள் வாகனத்தை அடித்து நொருக்கினார்கள். ஆனால் வாகனம் அங்கிருந்து ஒடியத்தப்பியது.

இதேவேளை நேற்றைய தினமும் சரவணபவானின் வாகனத்தின் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயன்றபோதும் அது கைகூடவில்லை என்பதோடு சரவணபவான் மீதும் உதயன் ஆசிரியர் பிறேமானந்த மீதும் தாக்குதுல் மேற்கொள்ளப்பட்டது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com