Monday, October 29, 2012

வடக்கு கிழக்கு உட்பட்ட நாடு முழுவதும் சீரற்ற காலநிலை ;காற்றுடன் கூடிய மழை தொடரும்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.

குறிப்பாக யாழ்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நேற்று முதல் தினம் முதல் கடுமையான மழை பெய்து வருகின்றது. இதேவேளை புத்தளம் மன்னார் வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 150 மில்லி மீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை பலமான காற்று வீசும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் நாட்டில் சகல இடங்களிலும் அடுத்துவரும் சில மணித்தியாலயங்களுக்கு கடும் மழையும் அதனைத் தொடர்ந்து மழையுடன் கூடிய காற்றழுத்த தாழ்வு நிலையும் நீடிக்கும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com