Monday, October 22, 2012

சர்வதேச சக்தி வள மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றுகின்றார்.

டுபாயில் நடைபெறும் சர்வதேச சக்தி வள மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தாயகத்திலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு டுபாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.  ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ

தலைமையிலான தூதுக்குழுவினருக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.  ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினருக்கு பெறுமை மற்றும் கௌரவம் சேர்க்கும் வகையில் இவ்வரவேற்பு அமைந்திருந்தது.

சர்வதேச சக்தி வள பிரச்சினைக்கு தீர்வு காண்பது , சக்தி வள தொழில்நுட்ப அபிவிருத்தி, எதிர்கால சக்தி வள பாதுகாப்பிற்காக  காபன் எரிசக்தியை மேம்படுத்தல், உள்ளிட்ட விடயங்கள் இம்மாநாட்டில் பிரதானமாக ஆராயப்படவுள்ளன. 21 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். டுபாய் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com