சென்னையை புயல் தாக்கும் அபாயம்: அலுவலகம் சென்றோர் விரைவில் வீடு திரும்பவும்
தென்கிழக்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள நீலம் புயல் கடந்த 3 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. வங்க கடலில் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உருவான இந்த புயல் தமிழக கடற்கரை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.
காலை நிலவரப்படி நீலம் புயல் 300 கி.மீ. தொலைவில் கரையை நெருங்கி வருகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எனவே, தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் அலுவலகம் சென்றோர் விரைவில் வீடு திரும்புமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறினார்.
0 comments :
Post a Comment