Monday, October 29, 2012

வெள்ளையர்களை கடத்துங்கள் அல்கொய்தாவின் புதிய தலைவர் வேண்டுகோள்

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவராக அல்சவுகாரி பொறுப்பேற்றுள்ளார். அவர் இணையதளத்தில் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எகிப்து நாட்டில் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மீண்டும் மக்கள் புரட்சியில் ஈடுபடவேண்டும். அங்குள்ள புதிய அரசு ஊழிலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக மக்கள் திரளவேண்டும். முஸ்லீம்கள் வெள்ளைக்காரர்களையும்இ மேற்கத்தீய நாட்டினரையும் கடத்துங்கள். இதன் மூலம் நமது நியாயங்கள் நிறைவேற்றப் பட வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா தொழில் முறை பொய்யர். அவரை யாரும் நம்ப வேண்டாம். அவருடைய உத்தரவால்தான் ஆப்கானிஸ்தான்இ பாகிஸ்தான் ஏவுகணைகள் மூலம் முஸ்லீம்களை கொல்கிறார்கள். அவர் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆதரவாளராக இருக்கிறார்.

சிரியா நாட்டின் அதிபர் ஆஷாத்துக்கு எதிராக மக்கள் ஒன்று திரளவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மொத்தம் 2 வீடியோ காட்சிகள் அனுப்பப்பட்டு உள்ளன. இவை 58 நிமிடங்கள் ஓடுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com