த.தே.கூ வின் மாகாண சபை உறுப்பினரின் வீட்டிலிருந்து பெருமளவிலான ஆயதங்கள் மீட்பு
த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரன் என்பவரின களுவாஞ்சிக்குடி செட்டிபாளையத்திலுள்ள வீட்டிலிருந்தே இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் மீட்கப்பட்ட குண்டுகள் செயலிழக்கச செய்யப்பட்டதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment