Wednesday, October 31, 2012

மெதுவாக உயர்ந்து வருகிறது: மேட்டூர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்வரத்தை விட அதிகளவில் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. அவ்வப்போது பெய்த மழையின் காரணமாகவும், கடந்த வாரம் கொட்டிய பருவமழையின் காரணமாகவும் டெல்டா பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து விட்டது.

இடையில் கடந்த 3 நாட்களாக மழை இல்லாததால் அணையில் இருந்து பாசனத்துக்கு வெறும் 1000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.

தற்போது புயல் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தற்போதும் டெல்டா பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து விட்டது. தற்போதும் 1000 கனஅடி தண்ணீரே திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 66 அடியானது. அணைக்கு 2 ஆயிரத்து 343 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com