Wednesday, October 3, 2012

நோர்வேயில் தமது பிள்ளைகளைக் கேட்டு 25 இலங்கையர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

நோர்வே நலனோக்கு அமைப்பினர், இலங்கைப் பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பறித்துச் சென்று, சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் வைத்துள்ள தமது 60 பிள்ளைகளை மீளவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி 25 இலங்கைப் பெற்றோர்கள் கடந்த ஞாயிறு முதல் ஒஸ்லோவில் உள்ள டொம் கேர்க்கன் கோயிலுக்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

இதே போல தங்களது பிள்ளைகளையும் பிரிந்துள்ள பல இந்திய, பாக்கிஸ்தானிய, மத்திய கிழக்கு மற்றும் ஈராக்கிய பெற்றோரும் இவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com