Saturday, September 15, 2012

நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் மேஜர்கள் அடிவாங்கியதில்லை – பொன்சேகா.

தான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இராணுவ மேஜர் ஒருவர் தாக்கப் சம்பவம் இடம் பெற்றதில்லை என்று சரத் பொன்சேகா தெரிவித் துள்ளார். மாலக சில்வாவால் இரணுவ மேஜர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஒழுக்க சீலமற்ற முறையில் நடந்து கொண்ட அரசியல்வாதியின் மகன் எப்போதும் செய்வது போல மீண்டும் இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கியுள்ளார்.

இது மிகவும் வெட்கப்பட வேண்டிய செயல். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் ஒழக்கமற்ற அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் எடுபிடிகளுக்கும் இரணுவத்தினர் மீது கைவைக்க இடமளிக்கவில்லை.

இப்போது அந்த அடிவாங்கிய இராணுவ மேஜருக்கு எதிராக இராணுவத்தில் விசாரணை நடக்கின்றதாம். அடிவாங்கிய இராணுவ மேஜர் தண்டிக்கப்படுவார். இதுதான் நாட்டின் இன்றை நிலைமை என்றார் பொன்சேகா.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com