Thursday, September 13, 2012

16வது தடவையாக கால்டன் சுவ உதான செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ தலைமையில் 16வது தடவையாக, கால்டன் சுவ உதான செயற்திட்டம், ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கால்டன் சுவ உதான சுகாதார செயற்திட்டத்தின் 16வது அமர்வு, கண்டி தெல்தோட்டை, கரகஸ்கட மத்திய மகா வித்தியாலயத்தில், ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தெல்தோட்டை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், இத்திட்டம் இடம்பெற்றது. பிரதேசத்தில் வசிக்கும் ஊனமுற்றோருக்கு கைத்தடிகள், சக்கர நாற்காலிகள் என்பன வழங்கப்பட்டன. தெல்தோட்டை, கரகஸ்கட மத்திய மகா வித்தியாலயத்திற்கு பியானோ ஒன்றும், விளையாட்டு உபகரணங்களும், ஜனாதிபதியின் பாரியாரினால் வழங்கப்பட்டன. இங்கு இடம்பெற்ற கண் மற்றும் பற் சிகிச்சை முகாமில் ஏராளமானோர், கலந்து கொண்டு, பயன்பெற்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com