Saturday, September 8, 2012

மனைவியை பிரிந்து 21வயது இளம் யுவதியுடன் குடும்பம் நடத்திய 68 வயது சட்டத்தரணி கொலை!

சம்பவத்துடன் தொடர்புடைய இளம் யுவதி கைது

அத்துருகிரிய பகுதி, ஜகத் மாவத்தை யிலுள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை 2.30 அளவில் சட்டத்தரணி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இளம் யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் 68 வயதுடைய சட்டத்தரணி என தெரியவந்துள்ளது. மாத்தறை பகுதியில் வசித்த இவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால மாத்தறையில் தனக்கு இருந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

25 மற்றும் 29 வயது மகன்களின் தந்தையான குறித்த சட்டத்தரணி, மூன்று மாதங்களுக்கு முன்னர் காலியில் இருந்து 1991 ம் ஆண்டு பிறந்த 21 வயதுடைய யுவதி ஒருவரை அழைத்து வந்து, அத்துருகிரிய ஜகத் மாவத்தையிலுள்ள வீட்டில் அந்த இளம் யுவதியுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.

இன்நிலையில், குறித்த இளம் யுவதியுடன் சட்டத்தரணி தொடர்ந்து முரண்பட்டு வந்துள்ள நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து இவர் தாக்கப்பட்டு மேல் மாடியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணியை தாக்க பயன்படுத்தப்பட்ட முட்டியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக் கொலையுடன் யுவதிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளதுடன் வேறு யாராவது இதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்களா என விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com