Thursday, August 30, 2012

இலங்கையர்களின் பணங்களை சுறுட்டிய நைஜீரியப் பிரஜைக்கு சிறை சிறைத்தண்டனை

ஈ.ஸ்.பி.ன். கிரிக்கெட் சபை நடத்திய அதிஷ்ட இலாபச்சீட்டில் 750,000 ஸ்ரேலிங் பவுண் பரிசு கிடைத் திருப்பதாக தெரிவித்து, இலங்கை யர்களை ஏமாற்றிய நைஜீரியப் பிரஜையொருவருக்கு கொழும்பு கோட்டை நீதிவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

இலங்கை இளைஞர் ஒருவரிடமிருந்து 720,400 ரூபாவை மோசடி செய்ததாகவும் மற்றொரு வர்த்தகரிடமிருந்து 1,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்யமுயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கிளின்ச் கிறிஸ்டியன் எனும் மேற்படி நபர் இக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக அவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து மேற்படி நைஜீரியப் பிரஜைக்கு 5 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத் தண்டனையை வழங்கியதுடன், இரு குற்றங்களுக்கும் தலா 1,500 ரூபா வீதம் அபராதமும் விதித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com