Thursday, August 30, 2012

நாட்டை மீட்டெடுத்த இந்த அரசாங்கத்தை மறப்பது துரோகத்தனமானது - சஜித் பிரேமதாச

மூன்று தசாப்த யுத்தத்தை முடித்து, பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்ட பெருமை, தற்போதைய அரசாங்கத்திற்கே உரியது எனவும் எந்தவொரு அரசாங்கத்தினாலும், சாதிக்க முடியாத கடமையை நிறைவேற்றி, தற்போது மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமே, பெற்றுக்கொடுத்தது என்பதை, மக்கள் மறக்கக்கூடாதெனவும், அவ்வாறு மறப்பது, துரோகத்தனமானதென, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிரித்தலை நகரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உண்மையை பேசி, நமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்பதே, எனது தூய்மையான நம்பிக்கையாகும். அந்த நிலைப்பாட்டிலிருந்து கொண்டு, நாட்டை நேசிக்கும் ஒரு அரசியல் வாதியாகவும், நாட்டின் பிரஜையாகவும், நாம் ஒரு விடயம் தொடர்பாக மகிழ்ச்சியடைய வேண்டும். மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தை எம்மால் வெற்றிகொள்ள முடிந்தது. அதற்குரிய கௌரவம், தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையே சாரும் என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com