Thursday, August 9, 2012

நீதித்துறை அதிகாரியொருவரின் நடத்தை குறித்து பாராளுமன்றத்தில் பேச முடியாது

ரிஷாத் பதியுதீனை ஜனக பண்டார எச்சரித்துள்ளார்.

மன்னார் மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ரிஷாத் பதியுதீன் நேற்று சபையில் உரையாற்றியபோது, பாராளுமன்ற நிலையியற் கட்டளையின்படி நீதித்துறை அதிகாரியொருவரின் நடத்தை குறித்து பாராளுமன்றத்தில் பேச முடியாது என சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

நீதித்துறை அதிகாரிகளை மதிப்பதாக தெரிவித்த அவர், எந்தவொரு நபரும் தீர்ப்பொன்று குறித்து திருப்தியடையாவிட்டால் அதைவிட உயர்ந்த நீதிமன்றத்திடம் மேன்முறையீடு செய்யலாம் எனவும் சுட்டிக்காடடினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com