Monday, August 6, 2012

மட்டக்களப்பில் ரயிலில் மோதி தந்தையும் மகனும் பலி.

மட்டக்களப்பில் ரயிலில் மோதி தந்தையும் மகனும் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் மகனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்த இடத்தில் மதுபான போத்தல் ஒன்றும் காணப்பட்டதாகவும் மதுபோதையில் குறித்த இருவரும் ரயில் தண்டவாளத்தில் நித்திரைகொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com