Monday, August 6, 2012

ரயிலில் யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது

கொழும்பிலிருந்து - பதுளை நோக்கிச் சென்ற ரயிலில் யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐந்து இளைஞர்களை கைது செய்யப்பட் டுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயில் பயணித்த குறித்த யுவதி மலசல கூடத்திற்கு சென்ற போது அதே ரயிலில் பயணித்த ஐந்து இளைஞர்களை கொண்ட குழுவினர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த ரயில் அப்புத்தளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் அப்புத்தளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com