Monday, August 6, 2012

நவநீதம்பிள்ளையின் குழு இலங்கை வருகின்றது,

ஜெனிவாத் தீர்மானத்தின் அடிப்படை யில், மனித உரிமை சபையைச் சேர்ந்த குழு ஒன்று அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வரவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த மூவர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக் குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கான "நடவடிக்கைத் திட்டம்" அரசால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய நகர்வாக ஐ.நா. குழு கொழும்பு வருவதற்கான அனுமதி அரசால் வழங்கப்பட்டுள்ளது.

ஜெனிவாத் தீர்மானத்தில் கூறப்பட்ட மூன்று விடயங்களையும் செயற்படுத்துவதில் இலங்கை அரசுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை இந்தக் குழுவினர் வழங்குவர் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com