Thursday, August 9, 2012

வலிகாமம் வடக்கில் மேலும் பல கிராமங்களில் மீள்குடியமர்வு

வலிகாமம் வடக்குக் கிராமங்களான கொல்லன்கலட்டி, செல்வபுரம் மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் மீள் குடியமர்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போர்க் காலத்தில் இந்த கிராமங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்தன. எனினும், தற்போது காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 650 பேர் அன்று மீள்குடியமர்த்தப்பட்டனர். இதற்கான நிகழ்வு வீமனகாமம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மீள் குடியமர்வு இடம் பெறும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வேலையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாயக் கருவிகளும் விதைகளும் வழங்கப்பட்டன. வலிகாம்ம் வடக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல அரச அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com