Sunday, August 19, 2012

வடக்கு-கிழக்கு காணிகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் புதுப் புத்தகம் திறக்கிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் உள்ள காணி சம்பந்தமான பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு மாகாண காணி ஆணையாளரிடம் மாற்றுத் திடம் இல்லை என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகிறது.

எல்எல்ஆர்சி முன்பு சாட்சியமளிக்கும் போது வடக்கு கிழக்கு காணிப் பிரச்சினைக்கு முஸ்லிம் காங்கிரஸின் முதல் கோரிக்கையானது மாகாண காணி ஆணையாளர் என்பதுதான் என கூறியிருந்தார் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய இணைப்பாளர் ரதிக் ரஜாப்தீன் .

மேலும் 1990 லும் அதன் பின்னரும் எல்ரிரிஈ அமைப்பினால் துரத்தப்பட்ட கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் இதுவரை மீண்டும்சொந்த ஊருக்குப் போய் வசிப்பதற்கு, அங்கு அந்தகைவிடப்பட்ட இடங்களைக் கைப்பற்றியுள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்று நல்ல திட்டம் இருக்கிறது. கிழக்கு அதிகாரிகளுக்கு அதனை நடைமுறைப்படுத்துவது அனாவசியமாகத் தெரிகின்றது என்றும் அவர் கூறினார்.

ஆனால் தற்போது அதுவிடயத்தில் வழமைபோல் தொப்பி பிரண்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com