Friday, August 3, 2012

எனது நான்கு நட்சத்திர பதக்கத்தைக் கழற்றியது உலக இராணுவ வரலாற்றில் ஒரு கரும்புள்ளி...

தனது நான்கு நட்சத்திர ஜெனரல் பட்டத்தை அகற்றியது உலக இராணுவ வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும், என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பஸ்யாலைப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

நான் இராணுவத்தில் இருக்கும் போது எனது அலுவலகப் பக்கமே வரப் பயந்து கொண்டிருந்த சில அலுவலர்களில் ஒருவர் வந்து எனது நான்கு நட்சத்திர ஜெனரல் பட்டத்தை அகற்ற வேண்டும் என்று தீரப்பு கொடுத்தது உலக இராணுவ வரலாற்றில் விழுந்த கரும்புள்ளியாகும்.

நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு தந்தீர்கள். என்னை உங்களது ஜனாதிபதியாக்க தெரிவுசெய்தீர்கள். நான் அந்த ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்றேன். அதில் சிறிதும் சந்தேகமில்லை. தங்களது முயற்சி வீணாகவில்லை. ஆனால், அந்த வெற்றியில் ஊழல்செய்தவர்கள் என்னைப் பிடித்து சிறையில் தள்ளினர். நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களைச் சிறையில் அடைத்தனர். அவர்களின் வீடுகளுக்குத் தீவைத்தார்கள். எனது குடும்பத்தினரை ஓட ஓட விரட்டினார்கள் என்று அவர் இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com