Wednesday, August 22, 2012

இராணுவ வீரர் குண்டை வெடிக்க செய்து தற்கொலை- மாத்தளையில் சம்பவம்

வவுனியாவிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த, கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் மாத்தளையில் வைத்து குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் பிரச்சினையால் எற்பட்ட மன உளைச்சலே இவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாத்தளை பொலிஸர் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com