Thursday, August 2, 2012

சர்வதேச வலையமைப்பு இயங்குவதால் தொடர்ந்தும் புலிகளுக்குத் தடை – அமெரிக்கா

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. 2011ம் ஆண்டுக்கான வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகளின் நிதி மற்றும் சர்வதேச வலையமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புலிகள் அமைப்பிற்கு எதிரான தடையை நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன்படி, புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் அமெரிக்கா வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் வரிசையில் பட்டியல் படுத்தியுள்ளது.

இராணுவ ரீதியாக 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட போதிலும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com