Wednesday, August 1, 2012

அவசர முடிவு எடுப்பதென்றால் போய் வயல் வெட்டுங்கள் - மகாநாயக்கர் தயாசிறிக்கு.

தலைவருடன் பிரச்சினை ஏற்படும் சமயத்தில் அரசாங்கத்தில் போய்ச் சேர்ந்து கொள்வது கட்சிக்காரர்களை நட்டாற்றில் கைவிடுவது போன்றதாகும் - மல்வத்தை மகாநாயக்கர், அதி வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர். அவசர முடிவு எடுக்காமல் அரசியலில் இருக்க முடியாது என்றால் வயலுக்குப் போய் விவசாயம் செய்யுங்கள் அல்லது உங்களுக்குப் பொருத்தமான சட்டத்தரணி வேலையைச் செய்யுங்கள் - அஸ்கிரிய மகாநாயக்கர், அதி வண. உடுகம புத்தரகித்த தேரர்.

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர நேற்று கண்டியில் மேற்படி மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெறச் சென்ற போதே அவர்கள் இவ்வாறு அறிவுரை கூறியிருக்கிறார்கள். கட்சியை சரியான பாதையில் திருப்புவதற் அதன் உள் இரகசியங்களை மக்களிடம் கூறப்போகிறேன். தான் ஒருபோதும் ஜனாதிபதியையோ அமைச்சர் பசிலையோ சந்திக்கவில்லை என்று அவர் மகாநாயக்கர்களிடம் கூறியபோதே அவர்கள் ஜயசேகராவுக்கு இவ்வாறு அறிவுரை கூறினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com