Sunday, August 12, 2012

தேர்தல் சுவரொட்டிகளை அகற்ற பொலிஸாருக்கு 7.2 மில்லியன்.

தேர்தல் நடைபெறவுள்ள பிரதேசங்ளில் காணப்படும் சட்டவிரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு, 7.23 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தபால் திணைக்களத்திற்கு 47.5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டை விநியோகத்திற்காகவே, இந்நிதி வழங்கப்பட்டுள்ளது என பிரதி தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்னாயக தெரிவித்துள்ளார்.

தபால் வாக்காளர் அட்டைகள், தபால் திணைக்களத்திடம், எதிர்வரும் 20 ஆம் திகதி ஒப்படைக்கப்படுமென, தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 20 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்புகள் விநியோகிக்கப்படும் எனவும் தபால் மூல வாக்களிப்பு ஆகஸ்ட் 27, 28 ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com