Tuesday, July 31, 2012

குற்றவாளிகளைப் பிடிக்க நாடு முழுதும் 'நாய்க்கார்'

குற்றவாளிகளை விரைவாகப் பிடிப்பதற்கு நாடு முழுதும் பிரதான நகரங்களில் நாய்க்கார் (DOG CAR) சேவையை அறிமுகப்படுத்த திடமிடப்பட்டுள்ளது என்று பொலிஸ் நாய் உத்தியோகப் பிரிவு கூறுகின்றது. இது தொடர்பான ஆவணங்கள் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குற்றம் நடந்த இடத்துக்கு பொலிஸ் நாய்களைக் கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதம் காரணமாக குறவாளிகள் தப்பிச் செல்வதற்கு, குற்றம் நடந்த இடம் பல வேறு ஏதுக்களால் மாறிவிடக் கூடிய வாய்ப்பு உள்ளதாலும் அதற்கு முன்பு குற்றவாளிகளைப் பிடிப்பது இந்த நாய்க்கார் திட்டத்தின் சோக்கமாகும் . உலகின் பலவேறு நாடுகளில் இந்த முறை வழக்கில் உள்ளது என்றும் பொலிஸ் கூறுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com