Saturday, July 7, 2012

ஆறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை வான் சாரதி கைது

புத்தளம், மாறவில தேசிய பாடசாலை ஒன்றில் இரண்டாம் தரத்தில் கற்வி பயிலும் ஆறு வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தினமும் பாடசாலை வானில், பாடசாலைக்கு சென்று வருபவர் எனவும் அவ் வாகனத்தின் சாரதியினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகன சாரதி சிறுமியை இரண்டு வாரங்களாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மாறவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com