Sunday, July 22, 2012

அமைச்சர் நவீனின் திசநாயக்காவின் நவீன ஐடியா !

மக்கள் பிரதிநிதிகள் கையால் இடம் பெறும் மோசடி மற்றும் ஊழலைக் குறைப்பதற்கு மத்திய அமைச்சர்களின் சம்பளத்தைக் கூட்ட வேண்டும் என்று அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்கா கூறினார். பொகவந்தலாவையில் இடம் பெற்ற பயிற்சி வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட அவர் சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவரின் சம்பளம் அமெரிக்க டொலர் மில்லியனாகும், அது இலங்கையில் 130 மில்லியன் ரூபாவுக்குச் சமனாகும் என்றார்.

அரச ஊழியருக்கு திறன் மதிப்பீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். அதன் கீழ் திறமை காட்டுபவர்களுக்கு ஊக்கக் கொடுப்பனவு வழங்க வேண்டும், தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com