Sunday, June 10, 2012

கிரியெல்ல இலங்கை எம்.பி.யா, பிரிட்டிஷ் எம்.பி.யா!. தடுமாறுகிறார் ரம்புக்வெல.

முற்றாகத் துடைத்தெறியப்பட்டும் புலிகளின் காலை நக்கும் புத்தி இன்னும் சில யூ.என்.பி. காரர்களுக்கு இருக்கின்றது என்று ஊடகம் மற்றும் தகவல் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் பல நாட்டுத் தலைவர்கள் உரை நிகழ்த்த விருந்த பொதுநலவாய வாணிப அமைப்பின் நிகழ்வு இரத்து செய்யப்பட்டது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம நடாத்தப்படவெண்டும் என்ற ஐ.தே.க. எம்.பி.லக்ஷமன் கிரியெல்லையின் கோரிக்கை பற்றி கருத்து தெரிவிக்கையிலேயெ ரம்புக்வெல இவ்வாறு கூறினார்.

கிரியெல்லை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தான் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும் என்று அமைச்சர் கூறினார். லக்ஷ்மன்’ கிரியெல்லை, இலங்கை எம்.பி.யா அல்லது பிரிட்டிஷ் எம்.பி. என்று கூட தெரியாது விட்டது அமைச்சர் ரம்புக்வெலைக்கு.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com