Saturday, April 7, 2012

கிளர்ச்சிக் குழு உறுப்பினர்களை காணவில்லை என சோசலிச கட்சி தெரிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிக் குழுத் தலைவரான குமார் குணரட்னம் (குமார மஹத்தயா) மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் உறுப்பினர் சேனாதீர குணதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, தமது கட்சியின் தலைவராக குமார் குணரத்னத்தினை நியமிக்க நீர்மானிக்கப்பட்டதாகவும் சேனாதீர குணதிலக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்களுடன் முக்கிய கலந்துரையாடலை நிறைவு செய்து கொண்டு, பின்னர் வீடு திரும்பும் வழியிலேயே இவர்கள் காணமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குமார் குணரட்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் பொலிஸாரினரால் கைது செய்யப்படவில்லை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com