Thursday, March 8, 2012

முல்லைத்தீவில் ஒரு தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், புலிகளினால் இந்த ஆயுதங்கள், முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்தன. வவனியா பொலிஸ் பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின்போது, இவ்வாயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சக்தி வாய்ந்த 9 கிளைமோர் குண்டுகள், 3 ஆர்.பீ.ஜி. ரொக்கெட்டுக்கள், இரண்டு கைக்குண்டுகள் ஆகியன, மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி தலைமையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com