Wednesday, March 7, 2012

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மேற்கத்தேய நாடுகளின் நோக்கமாகும்

இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மேற்கத்தேய நாடுகளின் நோக்கமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கிளைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார் .

ஜெனீவாவில் தான் சந்தித்த பெரும்பாலான வெளிநாட்டு தூதுவர்கள் இதனையே தன்னிடம் தெரிவித்ததாகவும், இது பயங்கரமான ஒரு விடயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் வெளிநாட்டு படைகளின் பங்களிப்புடன் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே அவர்கள் கடந்த 10 வருடகாலமாக எமக்கு சுட்டிக்காட்ட முயற்சி செய்தவாறு இருந்தார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com