Tuesday, February 28, 2012

ஐ.நா வில் எனது பேச்சை அடுத்து சர்வதேச அணுகு- முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமரசிங்க

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தாம் நிகழ்த்திய உரை தொடர்பில் சாதகமான பிரதிபளிப்புக்கள் கிடைத்துவருவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

ஜெனீவா நகரிலிருந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் தமது உரையைத் தொடர்ந்து, உரையாற்றி தாய்லாந்தின் வெளிவிகார அமைச்சர் இலங்கைக்கு பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை சார்பில் விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் நாட்டிற்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அது ஏனைய நாடுகளுக்கு சிறந்த செய்தியொன்றை வழங்குவதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தைத் தவிர ஏனைய பல நாடுகள் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து அணுகூலமான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் மேலும் பல நாடுகள் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கடவுள்ள பிரேரணை தற்போது அமரிக்க தூதரகத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்டுவருகிறது.

எவ்வாறாயினும் மார்ச் மாதம் மூன்றாம் வாரத்திலேயே பிரேரணையொன்றை கூட்டத்தொடரில் சடர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச பிரேரணையின் பிரதிகளே அமெரிக்க தூதரகத்தினால் விநியோகிக்கப்படுவதாகவும் இலங்கைக்கு எதிரான பிரேரணை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படுமா? இல்லையா என்பதை தற்போது உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பிரதிநிதிகள் ஜெனீவாவில் தமது செய்றபாடுகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான பிரேரணை தேவையில்லை - மஹிந்த சமரசிங்க!

முழுமையான மறுசீரமைப்பினை எட்டும் வகையிலான சிறந்த உள்ள திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முயல்கின்ற நிலையில், சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் கொண்டுவரப்படத் தேவையில்லை என்று இலங்கை அமைச்சரும் மனித உரிமை பேரவையின் மாநாட்டுக்கான இலங்கையின் தலைமைப் பிரதிநிதிரிதுமான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

மனித உரிமை பேரவையில் உரையாற்றியய அவர், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் செல்வதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் எந்தவிதமான தீர்மானமும் மனித உரிமைக் பேரவையில் கொண்டுவரப்படுவதற்கான அவசரமும், நியாயமும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதுவும் இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கனவே அமல்படுத்தத் தொடங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை செய்திருப்பதாக கூறியுள்ள அவர், அதனடிப்படையில் இறந்தவர்கள் பற்றியும், அதில் இராணுவத்துக்கு பங்கிருக்கிறதா என்பது குறித்து ஆராயவும், அதற்கான பதில் நடவடிக்கைகளுக்காகவும் சிவிலியன் மற்றும் இராணுவ நடைமுறறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களில் எந்தவொரு உள்ளூர் வழிமுறையும், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சரித்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆகவே இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு உரிய காலக்கெடு வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் வெளியார் தலையீடு எதுவும் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கங்க குறிப்பிட்டார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com