Tuesday, January 3, 2012

உயர்தர பரீட்சை பெறுபேற்று குளறுபடிக்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்கும் என்கிறார் டளஸ்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டபோது ஏற்பட்ட குளறுபடிக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை கணினிமயப்படுத்திய போது ஏற்பட்ட பிரச்சினையே பெறுபேற்றில் ஏற்பட்ட சிக்கலுக்கான காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெறுபேறுகளை கணினிமயப்படுத்தும் செயற்பாட்டில் மூன்று பேர் ஈடுபட வேண்டிய இடத்தில் ஒருவரே அவ்வேலைகளை பொறுப்பேற்று செய்துள்ளதாகவும், அதுவே பெறுபேறுகளில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் எனவும்,பிரதான காரணம் கண்டறியப்படும் எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com