Thursday, January 19, 2012

ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை

இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தனர் என்று குற்றச்சாட்டில் சுமார் இரண்டு வருட காலம் இந்தியாவின் அந்தமான் தீவில் சிறையிலடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் ஆறு பேர் நேற்றையை தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அந்தமான் தீவு நிதிமன்றத்தினால் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விடுதலை செய்யப்பட்டதாக இவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி கிருஸ்ண ராம் தெரிவித்தார்.

இவர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய கடலோர பாதுகாப்பு அதிகரிகளினால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com