Friday, January 20, 2012

அரசியல் தலைவர்களுடன் பேசிய விடயங்கள் திருப்தியளித்தன- எஸ்.எம்.கிருஷ்ணா

கடந்த நான்கு நாட்கள் இலங்கையில் தாம் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது அரசியல் தலைவர்களுடன் பேசிய விடயங்கள் திருப்தியளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமது நான்கு நாட்கள் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியா செல்லும் போது,செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் வாழ்கின்ற மாகாணங்களுக்கு, முறையாக அதிகாரப் பகிர்வுகளை வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருப்பதாக தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் தம்மிடம் பல்வேறு சந்தேகங்களை முன்வைத்தன எனவும் இது குறித்த ஜனாதிபதியுடன் பேசி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்த பல்வேறு வேலைத்திட்டங்கள் திருப்தியான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை கண்காணித்துக் கொண்டிருப்போம் எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com